Monday, February 23, 2009

காக்கி சட்டையும் கருப்பு அங்கியும்

கடந்த சில காலமாக காக்கி சட்டையும்
கருப்பு அங்கியும் கை கலப்பில் ஈடு பட்டு
காயப்பட்டு நிற்கின்றன.
காசை இவர்களிடம் தொலைத்துவிட்டு
மக்கள் ரத்த கண்ணீர்
வடித்துக்கொண்டிருக்கின்றனர்
இவர்கள் நடத்தும் யுத்தத்தில் அப்பாவி மக்கள்
அல்லல்பட்டு கொண்டிருக்கின்றனர்
இவர்கள் மெத்த படித்தவர்கள்
சட்டம் தெரிந்தவர்கள்
இருவர் வாதத்தையும் கேட்டு
தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் யார் பக்கம்
நியாயம் உள்ளது என்பது குறித்து கருத்து
சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்
அரசு செய்வதறியாமல் குழம்பி போய் உள்ளது
இந்த பிரச்சினை விரைவில் தீர்ந்தால்
அனைவருக்கும் நல்லது.
.

No comments: