தமிழறிஞர்களே உங்கள் பார்வைக்கு
தமிழிலக்கணம் கற்றதால் அதை அறியாரை
எள்ளி நகையாடுவதும்
அவரை தாழ்த்தி பேசுவதும் தகுமோ உமக்கு ?
எவ்வாறு பேசிடினும் தமிழ் மொழி பேசுபவன் தமிழன்தான்
என்பதை என்றுதான் உம் போன்றோர் உணர்வீரோ நானறியேன் ?
அனைத்தும் கற்றவன் என்று இறுமாந்த கம்பன்
ஏற்றம் இறைப்பவனிடம் பட்ட பாட்டை நீர் மறந்தீரோ ?
கற்றது கள்ளளவு கல்லாதது
கடலளவு என்ற அவ்வை பாட்டி
ஆடு மேய்க்கும் சிறுவனிடம்
சுடாத பழத்தை கேட்டு
தன் அறியாமையை சுட்டு கொண்டது
உம் நினைவிற்கு வரவில்லையோ ?
மாடு மேய்க்கும் இடையனை
மஹாகவி காளிதாசனாக்கி பண்டிதர்களை
அவன் காலடியில் மண்டியிட வைத்த
அந்த மாகாளியின் பெருமையை மறந்தீரோ ?
இலக்கணம் படித்து தலைக்கனம் பிடித்து
அலைந்தால் யாருக்கு லாபம் ?
ஊருக்கா இல்லை உம் போறோருக்க்கா ?
எனக்கு புரியவில்லை
நாம் அனைவரும் தமிழ் தாயின் மைந்தர்கள்
என்பதை என் மறந்தீர் ?
அன்னைக்கு அவள் மைந்தர்கள் அனைவரும் ஒன்று
அவ்வாறிருக்க தமிழர்களை என் கூறு போடுகிறீர்?
சாதியால் இணையமுடியாது
மதத்தினால் இணைய முடியாது
மொழியால் இணையவும்
விடமாட்டேன் என்று உறுதி பூண்டு
குருதியினை என் சிந்துகிரீர் ?
எவ்வளவு பிரிவுகள் இருந்தாலும்
ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும்
பிற மொழியினர் மொழியால் இணைந்து
நம் தாய் மண்ணில் உயர்ந்து நின்று கோலோச்சுவதை
கண்டும் ஏன் இவ்வாறு அறியாமையில் உழல்கின்ரீர் ?
உமக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
கற்றிலனாயினும் கேட்க என்றானே வள்ளுவன் அவன் சொல்லை நினைத்து
உம் சொல்லை செவி மடுக்கிறேன்
(இன்னும் வரும் )
No comments:
Post a Comment