Thursday, October 8, 2009

புராணங்கள் புரட்டுக்கள் அல்ல

புராணங்கள் புரட்டுக்கள் அல்ல

புரட்டிப்பார்க்க வேண்டியவை

புராணங்கள் அனைத்தும் புரட்டுக்கள் என்று கருதுவது தவறு

அவைகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன உதாரணத்திற்கு இராமாயணத்தில் தசரத மன்னனுக்கு நான்கு புதல்வர்கள் பிறக்கிறார்கள். உடலுறவின் மூலம் அல்ல .

அவன் மனைவிகள் வாய் மூலம் கருபாயசத்தை உட்கொள்ளுவதின் மூலம் கருத்தரித்து குழந்தை பெற்று கொள்ளுகிறார்கள்.

இந்த விஞ்ஞான தொழில் நுட்பம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் இருந்துள்ளது என்பதற்கு இது சான்றாக விளங்குகிறது. ஆனால் இந்த முறை தற்காலத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் வாய் மூலம் கருத்தடை மாத்திரை உட்கொண்டு கருவை கலைத்துவிடும் முறை மட்டும் வழக்கத்திற்கு வந்துவிட்டது. அனைவருக்கும் தெரியும்.

No comments: